World Book of Records விருது பெற்ற செந்தில் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வாழ்த்து

இலங்கை வாழ் தமிழர்கள் என்ற ரீதியில் செந்தில் தொண்டமானுக்கு  World Book of Records விருதுக்கு பல நாடுகளின் உறுப்பினர்களினால்  பரிந்துரைக்கப்பட்டு  விருது கிடைத்துள்ளமை நாம் பெருமை படவேண்டிய விடயமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் World Book of Records முதன்மையானதாக செயற்பட்டு வருகின்றது. அதன் முதன்மை குறிக்கோள்  உலக தரத்தின் செயல்பாடுகளென்று அழைக்கப்படும் நிகழ்வுகளை பதிவு செய்தல், கெளரவித்தல், பட்டியலிடுதல், பாராட்டுதல், அங்கீகரித்தல் மற்றும் தீர்ப்பளித்தல் என்பனவாகும். ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உலகளாவிய சான்றோர்கள் முன்னிலையில் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி அவர்களுடைய சாதனைகளை கெளரவிக்கிறது World Book of Records நிறுவனம்.

அறிவியல், விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், சுகாதாரம் , சுற்றுச்சூழல், சமூக மாற்றம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் பணிகளை உலகறிய செய்கிறது  World Book of Records நிறுவனம். இந்நிலையில்  இலங்கையின் மிக பழைமையான தொழிற்சங்கமாக உள்ள  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின்  இணைப்பு செயலாளருமான  செந்தில் தொண்டமான் இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் முன்னெடுத்த   கொவிட் பெருந்தொற்று பணி மற்றும் மக்களோடு மக்களாக களத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டதற்காகவும் சிறந்த சமூக சேவையாளராக செயற்பட்டமைக்காக அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு World Book of Records விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நோர்வே, சுவீடன், பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகளின் World Book of Records நிறுவனத்தை சேர்ந்த குழு உறுப்பினர்களினால் இந்த கொவிட்19 தொற்று காலத்தில் எமது அரசின் நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல், தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, கொவிட்19 பெருந்தொற்று காலத்தில் முகக் கவசம், தடுப்பூசி, சமூக இடைவெளி குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியது, முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரசாரத்தை நடத்தியதென மக்கள் நலனை முன்னிறுத்தி செந்தில் தொண்டமான் பணியாற்றியதற்காக World Book of Records விருதுக்கு இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது

சிறந்த சமூக சேவையாளராக செயற்பட்டு வரும் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Thu, 08/12/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை