ரிஷாத் பதியுதீன் MP யிடம் பொலிஸார் வாக்கு மூலம்!

CID விசாரணை பிரிவுக்கு சென்று பதிவு

டகயம 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் எம்.பியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் குழுவே அவரிடம் விசாரணைகளை செய்து வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெற்குப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளுடன் சென்றிருந்த விசேட பொலிஸ் குழு,

ரிஷாத் பதியுதீன் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் வேலைசெய்தபோது, கடந்த ஜூலை 03ஆம் திகதி எரி காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, ஜூலை 15ஆம் திகதி மரணமடைந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ரிஷாத் பதியுதீன் எம்.பியின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்குச் சேர்த்த இடைத்தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்களின் விளக்கமறியல் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வரையிலும், நீடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை