யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரதம்

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜீவ்காந்த், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக நேற்று (10) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சபையின் உறுப்பினரான ரஜீவ் காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் செயற்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டுள்ளதாகவும் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காதவிடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை