ஒட்சிசன் தேவைக்கு ஒத்துழைப்பு தாருங்கள்

சீனாவிடம் இலங்கை கோரிக்கை

கொவிட்19 தொற்று தீவிரமடைந்ததையடுத்து ஏற்பட்ட ஒட்சிசன் தேவைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சீனத் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.  வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்கை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்த இச்சந்திப்பில், முழு அளவில் அனைத்து நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டமைச்சரின் புதிய நியமனத்திற்காக சீனத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும், கொவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் முயற்சிகளுக்குமான சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இதன் போது மீண்டும் வலியுறுத்தினார்.

கொவிட்-19 ஒத்துழைப்பு, மக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள், பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் பல்துறைசர் ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்தக் கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன.

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை