களையை கட்டுப்படுத்த தவறின் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் களை நெல் என விவசாயிகள் குறிப்பிடும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் குறித்த களையை கட்டுப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற் செய்கையின் போது பாரிய குளங்கள் மானாவாரி செய்கை அடங்கலாக 71024 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் முரசுமோட்டை, உருத்திரபுரம், கணேசபுரம், பூநகரி போன்ற பகுதிகளில் அதிகளவில் களையின் தாக்கம் பரவி வருகின்றது.

வயலில் நீர் உள்ள போதும் விதைப்பதற்கு முன்பு விதைகளை சுத்திகரித்து நீர்ப்பாசன வாய்க்கால்களை சுத்தம் செய்து நெல்லை விதைப்பதன் மூலம் குறித்த களையினை ஆரம்பத்திலே விவசாயிகள் ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்திலே குறித்த களையை விவசாயிகள் இனம் கண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்வரும் வரும் காலங்களில் களைநாசினி பயன்பாடு இல்லாது போனால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விவசாயிகள் ஒன்றிணைந்து ஆரம்பத்திலே கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(பரந்தன் குறூப் நிருபர்)

 

 

Sat, 08/21/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை