பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க தீவிர ஆலோசனை

அதிகாரிகளுடன் அமைச்சர் தினேஷ் கலந்துரையாடல்

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆலோசித்து வருகிறது.

அதன்படி, செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

எவ்வாறாயினும் சில வகுப்புகளை  மாத்திரம் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அழைப்பதா அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா என்பது தொடர்பிலும் கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அத்தோடு, பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுள்ளது.

 

 

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை