தடுப்பூசி பெற்றிருப்பின் உம்ராவுக்கு அனுமதி

இன்று முதல் வெ ளிநாட்டு யாத்திரிகர்களுக்கு

தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள இன்று (9) முதல் அனுமதி வழங்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சவூதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்ரா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக 20 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் சவூதி அரேபிய தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களின் உம்ரா யாத்திரைக்கான கோரிக்கையின் போது, கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இணைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சவூதி அரேபியாவின் நுழைவு அனுமதி இல்லாத நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக்கொண்ட யாத்திரிகர்கள், சவூதியை வந்தடைந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை