நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

தினமும் 100க்கு மேற்பட்ட உயிரிழப்பு

நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு தினமும் 100க்கு மேற்பட்டு காணப்படுவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 05 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளதுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

75 ஆண்களும் 49 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணி  நேரத்துள் மேலும் 02 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 03 இலட்சத்து 42 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 03 இலட்சத்து 406 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 36 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Fri, 08/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை