இந்திய மீன்பிடிப் படகுகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி சட்ட விரோத கடற்றொழிலில் ஈடுபட்டதையடுத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தியக் மீன்பிடிப் படகுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (11) நேரடியாக பார்வையிட்டார்.

நீண்ட காலமாக காரைநகர் கடற்படை தளத்தை அண்டிய பகுதியில், சுமார் 210 இந்திய மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமையினால், இந்த படகுகளை விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தை தமக்கு வழங்குமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதேபோன்று, இந்த படகுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை படகு உரிமையாளர்களுக்கு வழங்குமாறு இந்தியத் தரப்புக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையிலேயே, கடற்றொழில் அமைச்சர் நேரடியாகச் சென்று படகுகளை பார்வையிட்டார். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எடுத்துச் செல்லாது கைவிடப்பட்ட நிலையில் சுமார் 138 படகுகளும், 2018 ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பினனர் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட சுமார் 70 படகுகளும் காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Thu, 08/12/2021 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை