மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி, பெண்களுக்காகவும் குரல்

அரசியல் கட்சிகளிடம் சாணக்கியன் எம்.பி கோரல்

 

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,.. பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதீயுதீன் வீட்டில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமிக்கு நீதிவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குறித்த சம்பவத்துக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தும் அரசியல் கட்சிகள், கடந்த காலங்களில் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் முன்வரவேண்டும்.

மேலும் சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை, சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Mon, 08/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை