அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

கல்வியமைச்சு செயலாளர் அறிவிப்பு

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதிபர் ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் கல்விசார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு வீட்டிலிருந்து கடமையாற்றும் காலத்தில் ஒன்லைன் முறை அல்லது பிற மாற்று முறைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தங்கள் சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என குறித்த சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 08/10/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை