இறப்போர், தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி ​பெர்னாண்டோபுள்ளே

நாட்டில் பதிவாகும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எடுக்கப்படும் என்றும் கூறினார்.இதேநேரம் ஒன்று கூடல்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளை பொது மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக் கொண்டார்.

 

 

 

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை