நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக சாடிய இராதாகிருஷ்ணன் எம்.பி

இன்றைய அரசையும் அதேவிடயத்திற்கு சாடல்

இதுவரை கடந்த 30 வருடங்களாக ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் தமிழர் தரப்பு விடயங்களை இதய சுத்தியுடன் அணுகவில்லை என்பதே கசப்பானஉண்மை. நல்லாட்சி அரசும் பெரிதாக அக்கறை காட்டவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும் என்றும் இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

தமிழர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவாரத்தையை நாம் இரண்டு விதமாக பாரக்கலாம்.

ஒன்று யுத்தத்திற்கு முன்பு இரண்டாவது யுத்தத்திற்கு பின்பு. யுத்தத்திற்கு முன்பு அரசாங்கம் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவாரத்தையும் தோல்வியில்தான் முடிவடைந்தது. அதற்கு இரண்டு தரப்பினரும் காரணம். யாரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற போட்டியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை யுத்தத்தின் பின்னரானது. உண்மையிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் அதனை முன்னாள் ஜனாதிபதி இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்திருக்க வேண்டும்.

இதுவரை கடந்த 30 வருடங்களாக ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் தமிழர் தரப்பு விடயங்களை இதய சுத்தியுடன் அனுகவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஆனால் இந்த அரசாங்கம் நினைத்தால் இந்த தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் .காரணம் பெரும்பான்மை பலம் முக்கிய பதவிகளில் உள்ள அனைவரும் ஒரே குடும்ப அங்கத்தவர்கள். ஒரு உணவு மேசையில் பேசி தீர்க்க முடியும். ஆனால் அதனை செய்வார்களா?” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை