டெல்டாவுக்கு 95 வீதம் பயனளிக்கும் கொவிஷீல்ட்

மருத்துவ ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தல்

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளை கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹால தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன என  குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளதும்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதும் உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் உடலில் பிறபொருள் எதிரிகள் உருவாகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக கொவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவது பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சினோபார்ம்,ரஸ்யாவின் ஸ்புட்னிக், பைசர் மற்றும் மொடேர்னா குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை