எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் மழை-Weather Forecast for 36 Hour-Rain

- சில இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதவிர ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Sun, 08/01/2021 - 17:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை