213ஆவது ‘அமாதம் சிசிலச’தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச தொடரின் 213ஆவது தர்ம உபதேசம் நிகிணி பௌர்ணமி தினமான நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்றது.

முதலில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர், அதனை தொடர்ந்து தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்கு வருகைத்தந்த ஸ்ரீலங்கா ஷ்வேஜின் நிகாயவின் பிரதி பதிவாளரும், பொகுனுவிட ஸ்ரீ விநயாலங்காராமவாசி, கலாநிதி வணக்கத்திற்குரிய குகுல்பனே சுதஸ்ஸி தேரரை வரவேற்றார். பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும்உன்னத நோக்கத்தில் சகல பௌர்ணமி தினங்களிலும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச நிகழ்வு நடத்தப்படுகிறது. கௌரவ பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட இந்த 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதன் முக்கியத்தவத்தை வணக்கத்திற்குரிய குகுல்பனே சுதஸ்ஸி தேரர் சுட்டிக்காட்டினார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்ற 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

 

Mon, 08/23/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை