16 வயது சிறுவனை காணவில்லை

பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பீலி தோட்டத்தைச் சேர்ந்த16 வயது சிறுவனை காணவில்லையென பன்விலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

க.பீரபாகௌசல்யன் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை பிற்பகல் வேளையில் இவர் கற்றல் வேலைக்காக தேசப்படம் வாங்குவதற்காக பன்விலை நகருக்குச்சென்று வரும் வேளையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுக/வத்/விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரது பெற்றோர், பொலிஸார் மற்றும் ஊர் மக்கள் இணைந்து தீவிரமாகத் இவரை தேடி வருகின்றனர். கடந்த புதன்கிழமை கல்பீலி தோட்ட மக்களும் தோட்ட நிர்வாகமும் பணியைப் பகிஷ்கரித்துவிட்டு தேடுதல் நடத்தியும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

புசல்லாவை தினகரன் நிருபர்

 
Fri, 08/13/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை