கொழும்பில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி பலி

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார்.

நாவல பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் தரம் -07 இல் கல்வி கற்ற இச்சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலையான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.இதையடுத்து அவறுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

"கொரோனா என் குழந்தையை அழைத்துச் சென்றது. என் குழந்தைக்கு நடந்ததை போன்று வேறு குழந்தைகளுக்கு நடந்துவிடக்கூடாது. கொரோனா தொற்று பரவலடைய அனுமதிக்காதீர்கள், என சிறுமியின் தாய் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Wed, 08/25/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை