12 வயதிற்கு மேற்பட்டோருக்கு மிக விரைவில் தடுப்பூசி

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

 

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்களின் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்தமையை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயம் குறித்து கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை