சரித்திரப் பிரசித்திபெற்ற ருஹுனு கதிர்காமக் கோயிலின் பெரஹர உற்சவத்துக்கு அச்சு ஊடக அனுசரணை பெற்றுக் கொடுக்கும் லேக்ஹவுஸ் நிறுவனம், மக்கள் பங்களிப்பின்றி நடைபெறும் பெரஹர உற்சவத்துக்கு நிதிப்பங்களிப்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது. அதற்கான காசோலையை லேக்ஹவுஸ் சட்ட மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் சட்டத்தரணி ரகித்த அபேகுணவர்தன, ருஹுனு கதிர்காம கோயில் பஸ்நாயக்க நிலமே டிஸன் குணசேகரவிடம் நேற்று கதிர்காம ஆலய வளவில் அமைந்துள்ள பஸ்நாயக்க நிலமேயின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளித்தார்.
Mon, 07/19/2021 - 06:00
from tkn