கதிர்காம திருவிழா நாளை ஆரம்பம்

கதிர்காமம் கொடியேற்ற விழா நாளை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் முதலாவது  பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின் பஸ்நாயக்க நிலமே டிஷன் குணசேகர தெரிவித்துள்ளார். இறுதி நாள் பெரஹர 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறும் எனக் கூறிய அவர் இம்முறை உற்சவம் மக்கள் பங்களிப்பின்றி நடைபெறும் எனவும் தெரிவித்தார். எனினும் பெரஹராவில் யானைகள், நாட்டியங்கள் உள்ளிட்ட கலாசார அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் எனவும் அவை சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் என்றும் நிலமே தெரிவித்தார். ஜூலை 24 ஆம் திகதி நீர் வெட்டுடன் உற்சவம் பூர்த்தி அடையும் என்றும் தெரிவித்தார்.

Fri, 07/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை