அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூசை

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது .

கலாநிதி யோகராஜன் அறக்கட்டளை அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் பிள்ளையார் இன் தனியார் விடுதியில் நேற்று பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ள பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்ஷவிற்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது. இந்த பூசை வழிபாட்டில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தீவிர நிலை காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்றுக் காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்தல் அமைச்சராகப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை, யாழ் விசேட நிருபர்கள்

Fri, 07/09/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை