உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பின்பற்றப்படும் கலப்பு விகிதாசார முறையை மாற்றியமைக்க பரிந்துரை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது தற்போது பின்பற்றப்படும் 60, 40 கலப்பு விகிதாரசார முறையை எதிர்வரும் காலத்தில் 70, 30 என்ற வீதத்தில் மாற்றியமைக்குமாறு உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறை மீளாய்வுக் குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும்போது 60 சத வீதம் தொகுதி அடிப்படையிலும் ஏனைய 40 சத வீதம் விகிதாசார முறையிலும் தற்போது காணப்படுகிறது.

அதனை 70 சத வீதம் தொகுதி அடிப்படையிலும் 30 சத வீதம் விகிதாசார முறையின் கீழும் என்ற அடிப்படையில் மாற்றியமைக்குமாறு குழு பரிந்துரை செய்துள்ளது.

நிலையற்ற உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பொன்று ஏற்படுவதற்கு இருக்கும் வாய்ப்பை குறைப்பதே இதன் நோக்கமாகுமெனவும் குழு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது இருக்கும் 8,000 பேர் வரையான உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தேர்தலின்போது 6,500 வரை குறைய வேண்டுமெனவும் பரிந்துரை செய்துள்ளது.

தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தொகையில் தேவையற்ற அதிகரிப்பு காணப்படுகிறது. அது 1,500 வரை குறையவேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை தொடர்பாக மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கையளித்துள்ளது.

Thu, 07/15/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை