பத்து நாட்களாக வீடு திரும்பாத மூன்று கற்பிட்டி மீனவர்கள்

புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (26), முஹம்மட் நபீல் (45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (21) ஆகிய மூன்று மீனவர்களே காணாமல் போயுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரை திரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் முறைப்பாடு செய்துள்ளதாக குடும்பத்தினர் கூறினர்.காணாமல் போன மூன்று மீனவர்களையும் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திரப் படகு மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேச கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று முன்தினம் (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை