ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமைக்கு மதிப்பளிக்கவும்!

டுவிட்டர் பதிவில் மங்கள கோரிக்கை

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகக் கூட இருக்கலாம். ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகுமென முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது  டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நான் அமைச்சராகப் பதவி வகித்த காலப் பகுதியில் தினமும் அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.அவர்களுடைய சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அவரின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நான் நிதியமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் அநேகமாக நாளாந்தம் எனது அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கு நான் பொலிஸாருக்கு அழைப்புவிடுக்கவில்லை. மாறாக போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். சில சந்தர்ப்பங்களில் அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகக்கூட இருக்கலாம்.

ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Sat, 07/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை