பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள்

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பள்ளிவாசல் தொழுகையின் போது சுகாதார விதிமுறைகளுக்கமைய ஒரே நேரத்தில் 100 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களுக்குள் பிரவேசிக்கும் போதும் பாதுகாப்பு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களை  கொண்டுவருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கைலாகு செய்வதை தவிர்த்து செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

Sat, 07/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை