AstraZeneca கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக AstraZeneca வழங்குவதற்கு பதிலாக Pfizer கொவிட் தடுப்பூசியை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் AstraZeneca கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்ற 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இரு வாரங்களுக்குள்ன AstraZeneca தடுப்பூசியின் ஒரு தொகை நாட்டுக்கு வரவுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thu, 07/08/2021 - 11:08
from tkn