வீசா இன்றி நாட்டில் தங்கியிருப்போருக்கு வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 டொலர் தண்டப்பணம்

வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம், தங்கியிருக்கும் காலத்துக்கான வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலரை அறவிடுவது உள்ளிட்ட வீசா வழங்கும் நடைமுறைகளை மறுசீரமைக்கும் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க நேற்று முன்தினம்(06) கூடிய பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்கு விதிகளுக்காக -2019 ஜூன் 03ஆம் திகதி 2126/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை ஜூலை 08ஆம் திகதி அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடிய இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் முறையின் கீழ் கலந்துகொண்டனர்.

சுற்றுலா வீசா கட்டணத்தை அறவிடும்போது தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் குழப்பான முறைக்குப் பதிலாக ஒரே கட்டண முறையை அறிமுகப்படுத்துவது, சுற்றுலா வீசாவுக்காக வழங்கப்படும் காலத்தை மூன்று மாதங்களிலிருந்து 09 மாதங்களாக மாற்றுவது உள்ளிட்டவை இதன்மூலம் மேற்கொள்ளப்படுமென குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் யூ.வீ.சரத் ரூபசிங்ஹ தெரிவித்தார்.

அத்துடன் தற்பொழுது இலங்கைப் பெறுமதியில் அறவிடப்படும் வீசா கட்டணம் அமெரிக்க டொலரில் அறவிடப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Thu, 07/08/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை