MSC கப்பல் இலங்கை கடல் எல்லையிலிருந்து வெளியேறியது

தீயும் கட்டுப்பாட்டிற்குள்; கடற்படை தெரிவிப்பு

எம்.எஸ்.சீ என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளை தீப்பற்றிய கப்பலே இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூருக்குச் சொந்தமான ரீ.சீ விகர் என்ற இயந்திரத்தின் உதவியுடன் இக் கப்பல் நேற்று மாலை இழுத்து செல்லப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்பரப்பின் கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து 480 கடல்மைல்களுக்கு அப்பால் பயணித்து கொண்டிருந்தபோது கப்பலின் இயந்திர அறையில் தீப்பரவல் ஏற்பட்டது.கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

Mon, 06/28/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை