ரிஷாட் மற்றும் பிரேமலாலுக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அழைப்பு

பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொள்வதற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாராளுமன்ற அதிகார சட்டத்திற்கிணங்க சபாநாயகரால் வழங்கப்படும் உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி இருவரையும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு பாராளுமன்றத்தின் சார்பில் நரேந்திர பெர்னாண்டோ கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.அவர்கள் இருவரும் தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பாராளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிசாந்தன்
 

Tue, 06/08/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை