ஹபுகஸ்தலாவையில் தேசிய மீலாத் விழா

பிரதமர் தலைமையில் நடைபெற ஏற்பாடு

நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில் இம்முறை மீலாத் விழா கொண்டாடுவதற்கான தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டுள்ளார். நுவரெலிய மாவட்டத்திலுள்ள 28 பள்ளிவாசல்களின் புனர்நிர்மாண வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிக விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ரப் அறிவித்துள்ளார்.

ஹற்றன் நகர ஜும்ஆப் பள்ளிவாசல் நினைவு முத்திரைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலிய மாவட்ட முஸ்லிம்களது வாழ்வு, வரலாறு, பாரம்பரியங்கள் பற்றிய நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

 

 

Wed, 06/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை