அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்சௌ லிஜியாங் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும்

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 முதல் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட நாட்களில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஓரிகான், வொஷிங்டன் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் 39 மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாற்றும் ஆன்டிபாடிக்கள் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா வைரஸை கையாளும் நடவடிக்கையில் மிகவும் மோசமாக செயற்பட்டதற்கு யாரை பொறுப்புடைமையாக்குவது? உலகிலேயே அதிமேம்பட்ட மருத்துவ வசதிகளையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ள ஒரு நாட்டில் 30 மில்லியன் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு இலட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்’ என கூறினார்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த அறிக்கையை 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 06/24/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை