அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதத்திற்குள்
கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 52 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றுள் 22 இலட்சம் தடுப்பூசிகள் இந்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
Mon, 06/21/2021 - 06:00
from tkn