பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகம்

விசேட திட்டம் மூலம் செயற்படுத்த நடவடிக்கை

பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையை போதிய அளவில் விநியோகிப்பதற்கென விசேட வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கு நூறு வீதம் சிறந்த தேசிய உணவு உற்பத்திகளை பெருக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இதன்படி சேதனப் பசளை உற்பத்தியை உள்நாட்டில் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை