கொரோனா மரணவீதம் திடீரென அதிகரிக்க காரணம் என்ன?

சுகாதார மேம்பாட்டு பணிமனை பணிப்பாளர் விளக்கம்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு காரணம் உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமையே என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதமானவர்கள் பாரதூரமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லையென்றும் 20 சதவீதமானவர்களுக்கே அவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரதூரமான அறிகுறிகளைக் கொண்டுள்ள நோயாளர்களை உடனடியாக அடையாளம் காணவேண்டியது அவசியமென்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில், இந்நோயாளர்களை குணப்படுத்துவது சிரமமாகுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, விரைவாக அவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை