வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மாதாந்த சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் தபால் அலுவலகங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாதுள்ள நோயாளர்களின் நலன் கருதி, மருந்துகள் தபால் மூலம் விநியோகிக்கப்படவுள்ளன.  இதனடிப்படையில் அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சைகளுக்காக பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வெவ்வேறாக பொதியிட்டு தபால் திணைக்களத்தினூடாக வீடுகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள முகவரிகளுக்கே மருந்துகள் விநியோகிக்கப்படுவதால் முகவரிகளில் மாற்றம் ஏதும் இருப்பின் அது குறித்து வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சு நோயாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களை 0720 720 720 அல்லது 0720 606 060 எனும் தொலைபேசி இலக்கங்களூடாக அறிந்துகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை