சுற்றளவின் அடிப்படையில் தேங்காயின் உச்சபட்ச விலை நிர்ணயம் தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இரத்து செய்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2194/73 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தேங்காயின் உச்சபட்ச சில்லறை விலலை, சுற்றளவின் அடிப்படையில் ரூபா 60 முதல் ரூ. 70 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தேங்காயின் சுற்றளவு
12 அங்குலத்திற்கு குறைவு - ரூ. 60
12 - 13 அங்குலம் - ரூ. 65
13 அங்குலத்திற்கு அதிகம் - ரூ. 70
என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பாவனையாளர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Sat, 06/19/2021 - 10:36
from tkn