எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கலந்துரையாடல்

நீர்கொழும்பு நகர மண்டபத்தில் ஏற்பாடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தின் காரணமாக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (12) காலை 09.00 மணியளவில் நீ்ர்கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா ஆகியோருடன் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

Sat, 06/12/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை