இந்தியாவின் ‘கூ’ செயலியில் அதிகாரபூர்வ கணக்கு தொடங்கிய நைஜீரிய அரசாங்கம்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ’ செயலியில் நைஜீரிய அரசு அதிகாரபூர்வ கணக்கு தொடங்கியுள்ளது.

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. இதற்கிடையில், நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி ஜனாதிபதி முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். ஜனாதிபதியின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அதை ஜனாதிபதியின் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவை நீக்கியதால் ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு டுவிட்டருக்கு தடை விதித்தது. டுவிட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரியா அரசு தங்கள் நாட்டில் பொதுமக்கள் டுவிட்டர் பயன்படுத்தவும் தடைவிதித்தது. தடையை மீறி டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரிய அரசு அதற்கு பதிலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் அதிகாரபூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.

’கூ’ செயலியில் நேற்றுமுன்தினம் நைஜீரிய அரசின் அதிகாரபூர்வ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி ’கூ’ மூலமாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ’கூ’ செயலி மூலம் அரசின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை நைஜீரிய அரசு பகிர்ந்து வருகிறது. இந்த நிகழ்வு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நைஜீரிய அரசு ’கூ’ செயலியில் இணைந்ததற்கு ’கூ’ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’கூ’ தளத்தில் இணைந்த நைஜீரிய அரசை வரவேற்கிறோம்.

’கூ’ தளம் தற்போது தனது சிறகை இந்தியாவை கடந்து பரப்பத்தொடங்கியுள்ளது’ என்றார்.

Sat, 06/12/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை