டாக்டர் தைக்கா சுஐப் ஆலிம் காலமானார்

கலாநிதி ஹஸன் மௌலானா இரங்கல்

அப்ஃழழுல் உலமா கலாநிதி காலஞ்சென்ற அஷ் ஷெய்ஹ் தைக்கா சுஐப் ஆலிம் (ரலி) இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்காக மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அவர் அரூஸிய்யா ஆன்மீக அமைப்பின் மூலம் இலங்கைக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் என்றும் நிலைத்திருக்கும் என்று புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரான பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி தெரவித்துள்ளார்.

புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும், பன்னூலாசிரியரும், பன்மொழித்துறை நிபுணரும், ஆன்மீகத் தலைவருமான கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் நேற்று முன்தினம் பின்னிரவு தனது 90 வது வயதில் கேரளா மாநிலத்தில் காலமானார். அன்னாரது மறைவையொட்டி விடுத்துள்ள அனுதாப செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Wed, 06/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை