நீண்டகாலம் சிறையிலுள்ள தமிழ் கைதிகள் மீது வழக்குகள் தொடராது விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும்

சிறைச்சாலையிலுள்ள தமிழ் சிறைக் கைதிகள் மீது வழக்குகளை தொடராது விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் அதிகளவான தமிழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தற்போதும் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் இதனை கூறவில்லை. இவர்களில் பலர் வழக்குத் தாக்கல் செய்யப்படாது, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். வழக்குகளை தொடராது தமிழ் இளைஞர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, மனித உரிமை மீறல் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 06/24/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை