மஜ்மா நகரில் இதுவரை 605 கொரோனா சடலங்கள் நல்லடக்கம்

கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்துவரும் ஓட்டமாவடி, மஜ்மா நகரில் இதுவரை மொத்தம் 605 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினமும் (14) 12 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொரோனாவால் மரணித்த 569 முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.14 கிறிஸ்தவர்களின் சடலங்களும் 14 இந்துக்களின் சடலங்களும் 06 பௌத்தர்களின் சடலங்களும் 02 வெளிநாட்டவர்களின் சடலங்களும் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

Wed, 06/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை