தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் 20 இலட்சத்தை தாண்டியது

நாட்டில் இதுவரை 20,23,256 பேருக்கு கொவிட்19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றுமுன்தினம் (08) மாத்திரம் 43,454 பேருக்கு சைனோபாம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 10,33,028 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன் நேற்று முன்தினம் 166 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 466 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 3,53,789 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

Thu, 06/10/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை