இதுவரை 17 ஆமைகள் கரையொதுங்கின

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று நேற்று கரையொதுங்கியது.

கொழும்புத் துறைமுக கடற்பரப்பில் அண்மையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளாகிய நிலையில் கடலில் மூழ்கியதையடுத்து கடலாமைகள் உயிரிழந்த நிலையில்  கரையொதுங்கி வருகின்றன. இவ்வாறு கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினமும் இவ்வாறு கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்து வரும் நிலையில் இதுவரை 17 கடலாமைகள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன.

 

Sat, 06/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை