கடும் மழை தொடரும்; 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தற்போது பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக நாட்டின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை தொடருமென்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, புத்தளம், குருநாகல், கம்பஹா,கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/05/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை