காவல்படை உத்தியோகத்தர் ஐவருக்கும் CID அழைப்பு

11ஆம் திகதி 4ம் மாடிக்கு வர பணிப்பு

யாழ்.மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரையும் வாக்குமூலம் வழங்க கொழும்பு வருமாறு  பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைத்துள்ளார்.

கொழும்பு நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை 09 மணிக்கு சமுகமளிக்குமாறு 05 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரத்தை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

Sat, 05/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை