மூத்த கலைஞர் C.B.M. காஸிம் காலமானார்

இலங்கை வானொலியின் மிக மூத்த கலைஞர்களில் ஒருவராக விளங்கிய"லியாவுல் பன்னான்" ( கலைச்சுடர்) C.B.M.காஸிம் காலமானார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்து காலமாகியுள்ளார். அன்னாரது ஜனாஸா குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் பிறந்த அவர், ஸாஹிராவின் மாணவராக இருந்தபோது தனது ஆசானாக விளங்கிய"தாஜுல் பன்னான்" மர்ஹூம் எம். ஏ. முஹம்மது மாஸ்டரின் வழிகாட்டலில் கலைத்துறையில் நுழைந்தார்.

முஹம்மது மாஸ்டர் எழுதி இலங்கை வானொலியில் "சானா" எஸ். சண்முகநாதனால் தயாரிக்கப்பட்டு தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பான "புயல் " என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்த அவர், அதன்பின் சுமார் 13-14 ஆண்டுகள் முஸ்லிம் சேவை நாடகங்களிலும், விவரணச் சித்திரங்களிலும் திறமை காட்டி நேயர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

Sat, 05/29/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை