நெதர்லாந்து குழு இலங்கை வருகிறது

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன

கொழும்பு துறைமுகத்திற்கருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

06 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்கருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள்

கப்பலில் நைட்ரையிட் அமிலக் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து, தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டாலும் நேற்று முன்தினம் கப்பல் முழுவதும் தீப்பரவல் ஏற்பட்டது.

இதனையடுத்து இக்கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே நெதர்லாந்து குழு இலங்கை வருகிறது.

 

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை