அனைத்து மனித குலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறட்டும்

- எதிர்க்கட்சித் தலைவரின் நோன்பு பெருநாள் வாழ்த்து

உலகம் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் இருக்கவும் அனைத்து மனித குலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டுமென   பிரார்த்தித்து  இந்த பேரழிவுகரமான காலத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி மத நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் மரியாதை செலுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச்செய்தியில் ;

முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடித்துவிட்டு,ஈதுல் பித்ர் ரமழான் கொண்டாடும் சிறப்புமிக்க நாள் இன்று (14) ஆகும். 

பிற மனிதனின் துயரங்களை புரிந்து கொள்ளவும், இறைவன் தனக்கு வழங்கிய அருட்கொடைகளிலிருந்து அதை பரஸ்பர ஒத்துழைப்புடன் அனுபவிப்பதும், சுய கட்டுப்பாட்டுடன் நேரத்தை செலவிடுவதும் நோன்பின் பொருள்படுகிறது.

அவர்கள் அந்த நோன்பை முடித்துவிட்டு, ரமழான் முடிவுறும் பிறை பார்த்து இன்று ரமழானை கொண்டாடுகின்றனர்

கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும், கொரோனா பேரழிவின் மத்தியிலும் உலகெங்கிலும் கொந்தளிப்பான நேரத்தின் மத்தியிலும் முஸ்லிம்கள் நீண்ட காலமாக தங்கள் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

உலகம் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மனித குலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டும் என்று நாம் அனைத்து நம்பிக்கைகளின் பெயரிலும் பிரார்த்திக்க வேண்டும்.

இதை அர்த்தமுள்ளதாக்குவதன் மூலம், இந்த பேரழிவுகரமான காலத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி மத நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் மரியாதை செலுத்துவோம்.

மனித குலத்தின் நன்மைக்காகவும்,பாதுகாப்பிற்காகவும் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளம் பரிசுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அந்த உன்னதமான குறிக்கோள்களைப் பின் தொடர்வதற்கான தொலை நோக்குடன் அனைத்து இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈத் முபாரக் எனும் சகலருக்கும் “அருள்பாலிக்கப்பட்ட பெருநாள் காலமாக அமையட்டும்” என்று பிரார்த்திப்போம் ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 05/14/2021 - 08:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை