முள்ளிவாய்க்கால்தூபி உடைத்து சேதம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படும் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியிலுள்ள நினைவு முற்றத்திலிருந்த நினைவுத்தூபி நேற்று அதிகாலை (13) இனந் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாதென தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை